புதுடில்லி,ஜுலை.20
டில்லியில் வரும் அக்., 3 ம் தேதி முதல் 14 வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக பலகோடி ரூபாய் செலவில் மைதான கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. நீச்சல் போட்டிகள், சியாம் பிரசாத் முகர்ஜி நீச்சல் மையத்தில் நடக்க உள்ளன. இதனால் இதனை புதுப்பிக்கும் பணி 377 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்றுமுன்தினம் இதன் திறப்பு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் நீச்சல் மையத்தை திறந்து வைத்தனர். சுமார் 5 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில், நீச்சல் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment