டெல்லி,ஜுலை.24
வருகிற 2011ம் ஆண்டு ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டிஇந்தியாவில் நடைபெறுகிறது.இதற்கான அனுமதியை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்டு தோரும், சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நடத்தப்படும். இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும். இந்த ஆண்டுக்கான ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 31ம் தேதி ஜெர்மனியில் துவங்குகிறது. எட்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, ஒரு முறைகூட சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றதில்லை. 2011ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியா களமிறங்குவதால், சாதிக்க வாய்ப்பு <அதிகமாகவுள்ளது. இதுவரை இந்திய அணி இத்தொடரில் ஒரு முறை 3வது இடமும், ஐந்து முறை 4வது இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 10, ஜெர்மனி 9 முறை சாம்பியன் கோப்பை வென்றுள்ளன.
ஏற்கனவே சென்னையில் 1996, 2005ஆம் ஆண்டுகளில் சாம்பியன் கோப்பை ஹாக்கிப்போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment