பெர்லின்,ஜுலை.17
ஜெர்மனியின் பேயர்ன்மியூனிச் கால்பந்து அகாடமியில் இந்திய சிறுவர்களுக்கு சிறப்பு கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பேயர்ன்மியூனிச் 21 வயதுக்குட்பட்ட அணி மேற்கு வங்காளம் வந்தது. அங்கு சிலிகுரி கால்பந்து அகாடமி வீரர்களுடன் ஒரு கண்காட்சி போட்டியில் விளையாடியது. இந்த போட்டிக்கான பேயர்ன்மியூனிச் அணியில் உலக கோப்பையில் தங்க காலணி வென்ற தாமஸ் முல்லரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பேயர்ன் 31 என்று வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய வீரர்களின் திறமையான ஆட்டம் பேயர்ன் வீரர்களை கவர்ந்தது.போட்டி முடிந்ததும் ஜெர்மனி சென்ற பேயர்ன் வீரர்கள் சிலிகுரி இளைஞர்களுக்கு பேயர்ன்மியூனிச் கால்பந்து அகாடமியில் பயிற்சி அளிக்க சிபாரிசு செய்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட பேயர்ன் மியூனிச் நிர்வாகம் சிலிகுரி கால்பந்து அகாடமியை சேர்ந்த சஞ்சீவ், லிடான் சில், திப்பு பர்மன், அமித் தாகூர், அபிஷென் செட்ரி, நிஷாந்த் ஆகிய 6 வீரர்களை ஜெர்மனிக்கு பயிற்சிக்காக அழைத்துள்ளது. இவர்கள் ஒரு வார காலம் மியூனிச் நகரில் உள்ள பேயர்ன் கால்பந்து அகாடமியில் சிறப்பு பயிற்சி பெறுகின்றனர். இதற்காக அடுத்த மாதம் 13ந் தேதி இவர்கள் மியூனிச் புறப்படுகின்றனர்.செலவுகள் அனைத்தையும் பேயர்ன் நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment