கேரளா,ஜுலை.28
சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் நடுவர் பயிற்சிக்கு கேரளத்தைச் சேர்ந்த பென்ட்லா டி கோத் இந்த பயிற்சிக்கு முதல் இந்தியப் பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நடுவர் பயிற்சி ஆகஸ்ட் 1 முதல் 6ம் தேதி வரை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 27 ஆண்களும் 3 பெண்களும் பங்கேற்கின்றனர். சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் நடுவர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
பென்ட்லா டி கோத் முன்னாள் கால்பந்து வீராங்கனையாவார். இதுவரை ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளின் கால்பந்து நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார் .
No comments:
Post a Comment