சென்னை,ஜுலை.11
சென்னையில் இந்தியா பிரேசில் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி செபடம்பர் மாதம் நடைபெறும் என்று இந்திய டென்னிஸ் சங்கத் துணைத் தலைவர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.இந்தபோட்டிகள் செப்டம்பர் மாதம் 17 முதல் 19ஆம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து கார்த்திக் சிதம்பரம் கூறியதாவது:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி விதிகளின் படி, மாலை 4.00 மணிக்குப் பிறகு போட்டிகளைத் தொடங்கக் கூடாது என்று உள்ளதால் மக்கள் அதிகம் பார்க்கும் நேரத்தில் நடத்துவது தொடர்பாக டென்னிஸ் அமைப்புகள்,ஆட்டக்காரர்களுடன் பேசிவருகிறேன்.இப்போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா உலகக் கோப்பை சுற்றுக்குமுன்னேறும் வாய்ப்புள்ளது என்று
கார்த்திக் சிதம்பரம் கூறினார்.
No comments:
Post a Comment