Thursday, July 22, 2010

ஆக்டோபசை ஸ்பெயினுக்கு தர மறுத்தது ஜெர்மனி

ஸ்பெயின்,ஜுலை.17

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் போது ஆரூடம் கூறி அசத்திய ஜெர்மனி நாட்டின் ஆக்டோபசை பெற ஸ்பெயின் முயன்று வருகிறது. ஆனால் அதற்கு ஜெர்மனி மறுத்து விட்டது.
அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின்போது ஜெர்மனியை சேர்ந்த பால் என்ற ஆக்டோபஸ் உயிரினம் போட்டியின் முடிவுகளை சரியாக கணித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெறுமென அந்த ஆக்டோபஸ் கூறிய ஆரூடம் பலித்தது. அதனால் இந்த ஆக்டோபசுக்கு ஸ்பெயினில் ஆதரவு பெருகி வருகிறது. அதனை தங்கள் நாட்டில் வைத்து பராமரிக்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக கண்ணாடி தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்பெயினுக்கு ஆக்டோபசை ஸ்பெயினுக்கு வழங்க ஜெர்மனி அரசு மறுத்துவிட்டது. இது ஸ்பெயின் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

No comments:

Post a Comment