புது தில்லி, ஜூலை.24
விளையாட்டு துறையிலுள்ள வீரர்வீராங்கனைகளைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளை தேர்வு செய்வதற்காக மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா
இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா.இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.விருதுடன் ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம், பதக்கம் வழங்கப்படும்.
அர்ஜுனா விருது
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் வழங்கப்படும் விருது அர்ஜுனா விருது. பெறுபவர்களுக்கு ஒரு நினைவுச் சிலை, பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
தேசிய கேல் புரோத்சஹான்
சமுதாய விளையாட்டு மேம்பாடு, சிறந்த விளையாட்டு அகாடமி மேம்பாடு, சிறந்த வீரர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் ஆகிய 4 பிரிவுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்பவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் தேசிய கேல் புரோத்சஹான் விருது வழங்கப்படுகிறது. இதை பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், சுழற்கோப்பை வழங்கப்படும். மேற்கூறிய இந்த விருதுக்கான வீரர்களை தேர்வு குழு ஒன்றை அமைத்துள்ளது மத்திய அரசு. ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை பி டி உஷாவை தலைவராகக் கொண்ட இக்குழுவில், டென்னிஸ் வீரர் லியான்டர் பயஸ், பளுதூக்கும் வீராங்களை மல்லேஸ்வரி உட்பட மொத்தம் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
துரோணாச்சாரியா விருது
சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கியவர்களுக்கு(பயிற்சியாளர்) ஆண்டுதோறும் துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது. விருதுடன் பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
இந்த விருதுக்கான வீரர்களை தேர்வு செய்ய ஹாக்கி வீரர் அசோக் குமார் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.
No comments:
Post a Comment