ஜோகன்னஸ்பர்க், ஜுலை.12
அடுத்த 2014ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கான சின்னம் ஜோகன்ஸ்பர்க்கில் அறிமுகம் செய்யப்பட்டது.ஏற்கனவே 1950ம் ஆண்டு பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்துள்ளது.கடந்த 1978ம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிதான் தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த கடைசி உலக கோப்பை போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த விழாவில் இச்சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் பிரேசில் அதிபர் லுசியா சில்வா கலந்து கொண்டு சின்னத்தை அறிமுகம் செய்தார்.அவர் பேசும்போது உலககோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பதை எங்களது தென்னாப்பிரிக்க சகோதரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளோம். இதேபோன்று நடத்திக் காட்டுவது எங்களுக்கு சவாலான விஷயம்தான்' என்றார்.
இந்த விழாவில் பிபா தலைவர் செப்பிளேட்டர்,பிரேசிலின் முன்னாள் பயிற்சியாளர்கள் கார்லஸ் அல்பெர்ட் பெரைரா, கார்லஸ் அல்பெர்டோ , பிரேசில் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் ரொமாரியோ, காபூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment