நியூயார்க், ஜூலை,20
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து வரும் 3 டென்னிஸ் தொடர்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஓட்டல் ஒன்றுக்கு சென்ற போது, கண்ணாடி டம்ளர் உடைந்து அவரது வலது காலில் குத்தி கிழித்து விட்டது. இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இருப்பினும் காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் இஸ்தான்புல், சின்சினாட்டி, மான்ட்ரியல் ஆகிய மூன்று தொடர்களில் அவர் விலகி உள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தால் வருகிற தொடர்களில் விளையாட முடியாமல் போவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
விரைவில் களத்திற்கு திரும்ப ஆர்வமாக இருக்கிறேன்' என்று செரீனா குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்டு 30ந்தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் போட்டிக்கு களம் திரும்ப அவர் திட்டமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment