
புதுடெல்லி, ஜூலை.17
இந்திய அணிக்கு வீரர்களை திறமைக்கு ஏற்பத்தான் தேர்வு செய்கிறோம் தவிர எந்த ஒரு வீரரையும் மண்டல அடிப்படையில் தேர்வு செய்யவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
டெல்லியில்நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஸ்ரீகாந்த் பேசியதாவது:
ஒரே நகரில் 11 சிறந்த வீரர்கள் இருந்தால் அவர்கள் அனைவரையுமே தேர்வு செய்வோம்.
மண்டலம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்து வீரர்களை தேர்வு செய்யமாட்டோம்.தேர்வு குழுவில் உள்ள எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்வது மட்டுமே. எனவே அதை மட்டுமே செய்கிறோம். இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்வதை மிகவும் கவனமுடன் செய்து வருகிறோம்.
தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க போதிய கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாட வைக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அவர்கள் சரியாக விளையாடவில்லை என்பதற்காக நீக்கவிடுவது இல்லை.
அணிக்கு கேப்டனாக வீரர்கள் தங்கள்தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். வழிநடத்தும் திறமையும், அனுபவமும் உள்ள ஒருவரால் தான் நல்ல கேப்டனாக உருவாக முடியும்.
கபில்தேவ் இப்படித்தான் கேப்டனாக உருவானார். அவர் சக வீரர்களை உற்சாகப்படுத்தியததால் தான் 1983ல் உலக கோப்பையை இந்தியா வெல்ல முடிந்தது
என்று பேசினார்.
No comments:
Post a Comment