லண்டன்,ஜுலை.15
பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சாவுடன் லண்டன் நகரை சுற்றிப்பார்த்ததால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மாலிக் நீக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் சோயப் மாலிக் மட்டும் அதில் கலந்து கொள்ளாமல் தனது மனவி சானியா மிர்சாவுடன் லண்டன் நகரை சுற்றிப்பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாக்.நிர்வாகம் சோயப் மாலிக்கை முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும் கிரிக்கெட் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்துமாறும் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷோயப் மாலிக் நீக்கப்பட்டதற்குக் காரணம் அவர் இன்னும் முழு பார்முக்கு திரும்பவில்லை என்பதனாலேயே என்றும் அவர் தனது மனைவி சானியா மிர்சாவுடன் பொழுதைக் கழிப்பதற்காக சில வலைப் பயிற்சி ஆட்டங்களை துறந்தார் என்பதற்காக இல்லை என்று பாகிஸ்தான் அணி நிர்வாகி யவார் சயீத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாலிக், கம்ரன் அக்மல், ஷாகித் அப்ரீடி, உமர் அக்மல் போன்ற வீர்ர்களிடம் வசூலித்த அபராதத் தொகைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசரம் அவசரமாக திருப்பி அளித்துள்ளது.
No comments:
Post a Comment