ஜோகனஸ்பர்க், ஜுலை.14
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிபோட்டியில் திறமைமிகுந்த நல்ல நடுவரை நியமிக்கவில்லை என்று நெதர்லாந்து வீரர் ஆர்ஜான் ராபன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹோவர்டு வெப்
ஸ்பெயின்நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான இறுதி போட்டிக்கு இங்கிலாந்தை சேர்ந்த ஹோவர்டு வெப் என்ற நடுவர் நியமிக்கப்பட்டிருந்தார். முன்னாள் போலீஸ் அதிகாரியான வெப் ஹோவர்டு இறுதி போட்டியில் 14 மஞ்சள் அட்டைகளை வழங்கிதோடு கூடுதல் நேரத்தின் போது நெதர்லாந்து வீரர் ஹெட்டிங்காவுக்கு சிவப்பு அட்டையும் வழங்கியதால் நெதர்லாந்து அணி 10 வீரர்களுடன் விளையாடியது. இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்ட ஸ்பெயின் அணியினர் ஒரு கோல் அடித்து கோப்பையை கைப்பற்றினர்.இந்த போட்டியில் நெதர்லாந்து வீரர் ஆர்ஜான் ராபனுக்கு இரண்டு முறை கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது.ஒரு முறை ராபன் பந்தை கடத்தி வரும் போது ஸ்பெயின் தடுப்பாட்டக்காரர் கார்லஸ் புயால் ராபனின் கால்களை கட்டிக் கொள்வார். ஆனால் அந்த சமயத்தில் ராபனிடம் பந்து இருந்தது.இதனால் நடுவர் நெதர்லாந்துக்கு 'அட்வான்டேஜ்' என்று நினைத்து 'பவுல்' கொடுக்கவில்லை. கார்லாய் புயாலின் இந்த செயலால் ராபனால் கோல் அடிக்க முடியாமல் போனது. ஸ்பெயின் கோல் ஏரியா அருகே இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராபின் கூறும்போது:
இறுதி ஆட்டத்தை வழி நடத்தக் கூடிய திறமையான தகுதி வாய்ந்த நடுவரை 'பிபா'நியமிக்கவில்லை. அணிகள் மட்டும் தரமானதாக இருந்தால் போதாது. நடுவரும் திறமையானவராக இருக்க வேண்டும்.ஸ்பெயின் கோல் ஏரியா அருகே எனது காலை கார்லஸ் புயால் கட்டிப் பிடித்தார். இதனை நடுவர் கண்டு கொள்ளவில்லை.ஆனால் கூடுதல் நேரத்தில் ஹெட்டிங்காவுக்கு மட்டும் சிவப்பு அட்டைக் கொடுத்தார். ஆட்டம் முடியும் தருவாயில் இது போன்று செய்வது எந்தவிதத்தில் நியாயம் என்று ஆவேசப்பட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
ராபினின் கருத்து குறித்து பிபா தலைவர் செப் பிளேட்டர் கூறும்போது :
இறுதி ஆட்டத்தில் பவுல்தான் அதிகமாக இருந்தது. நேர்மையான ஆட்டத்தை மட்டுமே எதிர்பாக்கிறோம். உலகத்தரம் வாய்ந்த இரு அணிகளின் ஆட்டமும் எனக்கு திருப்தியளிக்கவில்லை. உலக கோப்பையில் நடுவர்களின் முடிவுகள் 96 சதவீதம் சரியாகவே அமைந்துள்ளது. எந்த விஷயத்தை செய்யும் போதும் 100 சதவீதம் சிறப்பாக செய்ய முடியாது. குறைகள் வரத்தான் செய்யும்'' என்றார்.
No comments:
Post a Comment