கொழும்பு,ஜுலை.14
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் காயத்தால் இந்தியா திரும்பவுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு பதில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முனாஃப் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஜாகீர் கான் காயமடைந்து தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் மற்றொரு அனுபவ வீச்சாளரும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை அளித்துள்ளது.
விதர்பா வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட் ஆகியோரும் பரிசீலனையில் உள்ளனர்.
நாளை இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணியை சந்திக்கிறது.
முதல் டெஸ்ட் காலேயில் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் இல்லாதது அணியின் வெற்றியை பாதிக்கும்தோனி
இலங்கைக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், ஸ்ரீசாந்த் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது அணிக்குபின்னடைவு என்று அணித் தலைவர் தோனி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாஇலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 18ந்தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் ஆகியோர் தொடரில் இடம் பெறவில்லை. இதுதொடர்பாக கேப்டன் தோனி கூறுகையில்:
ஜாகீன்கான், ஸ்ரீசாந்த் இருவரும் காயம் காரணமாக அண்யில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருவருமே அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள். தொடரில் அவர்கள் இடம் பெறாமல் இருப்பது அணிக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்
No comments:
Post a Comment