Thursday, July 22, 2010

வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து

எட்ஜ்பாஸ்டன் ,ஜுலை.14

3வது இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வங்கதேச அணியை 144 ரன்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 2 1 என்று கைப்பற்றியது.
2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை வென்றதால் நம்பிக்கையுடன் பார்க்கப்பட்ட வங்கதேச அணியை இங்கிலாந்து வீழ்த்தியது.
மொர்டசா, முதல் ஓவரில் கீஸ்வெட்டரை பவுல்டு செய்தார். ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் விழாமல் இருந்தன. வங்கதேச வீச்சாளர்களின் பந்து மைதானம் நெடுக பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தது.
ஸ்ட்ராஸ் 140 பந்துகளில் 16 பவுண்டரி 5 சிக்சர்கள் சகிதம் 154 ரன்கள் எடுக்க, ஜொனாதன் ட்ராட் 110 ரன்களை எடுத்தார். இர்வுஅரும் இணைந்து 40 ஓவர்களில் 250 ரன்களை இரண்டாவது விக்கெட்டுக்காகச் ஸேர்த்தது புதிய இங்கிலாந்து சாதனையானது.
இது போதாதென்று கடைசியில் களமிறங்கிய ரவி பொபரா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 45 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து 50 ஓவர்களில் 347 ரன்களை விளாசியது. இது இங்கிலாந்து ஒரு நாள் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அடிதடியிலும் மோர்டசா 10 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷஃபியுல் 9 ஓவர்களில் 97 ரன்களையும், ஷாகிப் 75 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 45 ஓவர்களில் 203 ரன்களுக்கு சுருண்டது. ரவி பொபாரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment