ஹாங்காங்,ஜுலை.22
உலக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இன்டர்போல் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெறும் அணிகள் குறித்து மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா மற்றும் ஹாங்காங்கில் சூதாட்டம் நடைபெற்றது. சட்டவிரோதமாக 800 இடங்களில் நடைபெற்ற இந்த சூதாட்டம் தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்திய இன்டர்போல் போலீஸார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்து அவர்களிடமிருந்து கார், கம்ப்யூட்டர், செல்போன்கள் ஆகியவற்றை கைபற்றியுள்ளனர்.இந்த சூதாட்டத்தில் பந்தயமாக கட்டப்பட்ட 1கோடி அமெரிக்க டாலரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சூதாட்டம் மூலமாக சமூக விரோதிகள் சுமார் 16 கோடி அமெரிக்க டாலருக்கு மேலாக சம்பாதித்தாகவும் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீனா, தாய்வானை சேர்ந்தவர்கள்.இந்த சூதாட்டதாரிகள் அவர்களின் போட்டியில் முடிவில் எந்தவொரு கால்பந்து ஆட்டத்திலாவது செல்வாக்கைச் செலுத்தினார்களா என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.
ஆட்டங்களின் முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டனவா அல்லது எந்தவொரு ஆட்டக்காரர் மீதாவது செல்வாக்கு செலுத்தப்பட்டதா என்பது குறித்து இப்போது எதுவும் பேச முடியாது என்று இண்டர்போல் கூறுகிறது.ஆனால், தமது விசாரணைகளில் இது குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.இந்த நடவடிக்கைக்கு சோகா 3 என்று பெயரிட்டுள்ளனர் இண்டர்போல் அதிகாரிகள்.
No comments:
Post a Comment