Thursday, July 22, 2010

காமன்வெல்த் குழுவின் கோரிக்கையை நிராகரித்தது பி.சி.சி.ஐ.

டெல்லி, ஜூலை.17
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்தியஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மாற்றவேண்டும் என்ற காமன்வெல்த் குழுவின் கோரிக்கையை நிராகரித்தது பி.சி.சி.ஐ.வரும் அக்டோபர் மாதம்
டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது.அதே சமயத்தில் இந்தியஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரும் நடைபெறுகிறது என்பதால் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு இந்த கோரிக்கையை பி.சி.சி.ஐயிடம் முன் வைத்தது.
இது குறித்து சுரேஷ் கல்மாடிஎழுதிய கடிதத்தில் இந்தியா ஆஸ்திரேலியா தொடர் காமன்வெல்த் போட்டிகள் சமயத்தில் நடைபெற்றால் ரசிகர்களின் ஆர்வம் இந்த கிரிக்கெட் தொடர் மீதுதான் இருக்கும்.அதனால் இந்தியா ஆஸ்திரேலியா தொடரின் தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார்.ஆனால் பி.சி.சி.ஐ. தொடரின் தேதிகளை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, எதிர்காலப் பயணத்திட்டம் படி இந்த தொடர் நடைபெறுகிறது. மேலும் ஆஸ்ட்ரேலிய அணிக்கும் நிறைய தொடர்கள் இருப்பதால் தேதிகளை மாற்றுவது இயலாத காரியம் என்று கைவிரித்துள்ளது.

No comments:

Post a Comment