லண்டன், ஜூலை. 22
ஆஸ்திரேவியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்த அப்ரிடியை 20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டிகேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்னில் தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி .இதனால் விரக்தியடைந்த அப்ரிடி ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
அப்ரிடியின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இம்ரான் கான், அமீர் சோகைல், ரமீஸ்ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இக்கட்டான நிலையில் ஓய்வு பெற்று பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு நெருக்கடி கொடுத்தால் அப்ரிடிமீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. டெஸ்ட் போட்டியில் திறமையை நிரூபிக்காத அவரால் 20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டியில் எப்படி கேப்டனாக பணியாற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் அப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையே காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்டில் அப்ரிடி விளையாடமுடியாமல் நாடு திரும்பியுள்ளார். அவரைதொடர்ந்து பாக்.அணியின் டெஸ்ட் கேப்டனாக சல்மான்பட்நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment