
லண்டன்,ஜுலை.11
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அந்த அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்துகொண்டது வங்கதேசம்.
டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி.வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இம்ருல் காயெஸ், ஜஹ்ருல் இஸ்லாம் ஆகியோர் களமிறங்கினர்.இருவரும் சிறப்பாக ஆடி அந்த அணிக்கு நல்ல அடித்தளத்தை கொடுத்தனர்.இம்ருல் காயெஸ் 76 ரன்களும் ஜஹ்ருல் இஸ்லாம் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஆடவந்த டிரோட் 94 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து நின்றாடவில்லை.
இதனால் 49.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை வங்கதேச அணி பதிவு செய்தது.
No comments:
Post a Comment