டெல்லி,ஜுலை.11
வரும் அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக போட்டிக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்.
54 நாடுகளிலிருந்து சுமார் 10 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. போட்டிகளுக்கான ஸ்டேடியம், வீரர்கள் தங்கும் காமன்வெல்த் கிராமம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை சுரேஷ் கல்மாடிபார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது:
போட்டிகளுக்கான அனைத்துப் பணிகளும் முடிந்து, தயார் நிலையில் உள்ளது. காமன்வெல்த் போட்டிகளைக் காண உலகம் முழுவதிலிருந்து சுமார் 20 லட்சம் மக்கள் வருவார்கள் என்றும் டெல்லியில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமாப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருவதாகவும் கூறினார்.1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளுக்குப் பின்னர் டெல்லியில் நடைபெறப்போகும் சர்வதேச போட்டி காமன்வெல்த் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment