Thursday, July 22, 2010

இலங்கை கிரிகெட் வாரியத்தின் சார்பில் முரளிதரனுக்கு பிரிவுபசார விழா


கொழும்பு,ஜுலை.17
இலங்கை கிரிகெட் வாரியம் முரளிதரனுக்கு பிரிவுபசார விழாவை ஏற்பாடு செய்துள்ளது.இந்தியாஇலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஞாயிறன்று காலேயில் துவங்குகிறது இந்த போட்டியுடன் முரளிதரன் ஓய்வு பெறவுள்ளதால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது இலங்கை கிரிகெட் வாரியம்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம்: டெஸ்ட் துவக்கத்தில் சுருக்கமான கௌரவிப்பு நிகழ்ச்சியும், டெஸ்ட் முடிவில் மிகப்பெரிய அளவில் ஒரு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளது. முரளிதரனுக்கு ஒரு நல்ல பிரிவுபசார விழாவை ஏற்பாடு செய்துள்ளோம்.அந்த நிகழ்வு மறக்க முடியாததாக இருக்கும் என்றும் முதல் நாள் ஸ்டேடியத்தில் அவர் நுழையும் போது பேண்டு வாத்தியங்களுடன் முரளியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.800 விக்கெட்டுகளுக்கு இன்னும் 8 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில் ஆட்டக்களம் கூட முரளிதரன் சாதனைய நிகழ்த்த ஏதுவாக அமைக்கப்படும் என்றும் தெரிகிறது.


No comments:

Post a Comment