டெல்லி,ஜுலை.22
இந்திய மகளிர் ஹாக்கி அணியைச் சேர்ந்த ரஞ்சிதா தேவி அணியின் பயிற்சியாளர்,வீடியோகிராபர் ஆகியோர் தனக்கு செக்ஸ் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.இதனை தொடர்ந்து தன்மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளர் வரும் தொடர்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தற்காலிகமாக விலகியுள்ளார். ஆனால் வீடியோகிராபர் பசவராஜ் அழகி ஒருவருடன் இருந்த புகைப்படம் வெளியானதால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சிதா தேவி வீடியோகிராபர் மீது கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு பயிற்சியாளர் கௌஷிக், வீடியோகிராபர் பசவராஜ் ஆகியோரை தனித்தனியாக விசாரிக்க முடிவுசெய்துள்ளது. இந்த சம்பவம் இந்திய ஹாக்கி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சிதா தேவி காமன்வெல்த் ஹாக்கி அணிக்கான உத்தேச வீராங்கனைகள் பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த பயிற்சியாளர் கௌஷிக்:தன் பெயரை இந்தக் களங்கத்திலிருந்து விடுவித்து கொண்ட பிறகே அடுத்த தொடர்களில் பயிற்சியாளராகத் தொடர்வேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment