Thursday, July 22, 2010

பாக். அணியில் மீண்டும் யூசுப், யூனுஸ் - இஜாஸ்பட்



கராச்சி, ஜூலை.20

சர்வதேசபோட்டிகளிலிருந்து தடைவிதிக்கப்பட்டபாக்.அணியின் முன்னணி வீரர்களான முகமதுயூசுப், யூனுஸ்கான் ஆகியோர் மீண்டும் பாக்.இடம் பெறலாம் என்று பாக்.கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாக். அணி 150 ரன்னில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியினால் மனமுடைந்த கேப்டன் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இந்நிலையில் காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடாமல் நாடு திரும்பி விட்டார் அப்ரிடி. இவருக்கு பதிலாக சல்மான்பட் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ்பட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னாள் கேப்டன்களான முகமது யூசுப், யூனுஸ்கான் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது. தற்போது நெருக்கடியில் இருக்கும் அணியை காப்பாற்றஇருவரும் தேவைப்படுகிறார்கள்.இதுதொடர்பாக இருவரிடமும் அவர் பேசியுள்ளதாக தெரிவித்தார்.இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான மொகமது யூசுப், தான் எந்த ஒரு கேப்டனுக்கும் கீழ் விளையாடத் தயாராக இருப்பதாகவும்,நாட்டிற்காக நான் எப்போதும் விளையாடத் தயாராகவேயிருக்கிறேன், வேண்டாமென்றால் நான் ஓய்வு பெற்றவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று கூறியுள்ளார் மொகமது யூசுப்.

No comments:

Post a Comment