ஜோகனஸ்பர்க், ஜுலை.14
உலக கோப்பையை வென்று தாய்நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களுக்கு மாட்ரிட் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் வீரர்கள் மாட்ரிட்டில் உள்ள பஞ்சரா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினர். விமானநிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்தின் அருகில் உள்ள ஹோட்டலில் அவர்கள் மதிய உணவு அருந்தினர்.
பின்னர் அவர்கள் ஸ்பெயின் அரசர் ஜுவான் கார்லஸ் ராணி சோபியா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, ''நமது நாட்டின் கனவை நினைவாக்கியுள்ளனர். கடும் உழைப்பிற்கும் கால்பந்து ஆட்டத்தில் உலகுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள்'' என்று ஸ்பெயின் அரசர் வாழ்த்தினார்.
பின்னர் அரச குடும்பத்தினருடன் ஸ்பெயின் வீரர்கள் குருப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து பிரதமர் லுயிஸ் ரோட்ரிகஸ் சப்ரடோ வை சந்தித்து அவரிடமும் வாழ்த்து பெற்றனர். பின்னர் அவர்கள் ஒரு திறந்த பஸ்சில் மாட்ரிட் நகரத் தெருக்களில் ஸ்பெயின் வீரர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ஸ்பெயின் மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment