Wednesday, September 22, 2010

சர்வதேச போட்டிகளிலிருந்து


சைடுபாட்டம் ஓய்வு
லண்டன்,செப்.23
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான 32 வயதுடைய சைடு பாட்டம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 2001ல் லார்ட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை இவர் 22 டெஸ்ட் போட்டிகளில் 313 ரன்களையும், 79 விக்கெட்டுகளையும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 133 ஓட்டங்களையும், 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.மேலும் 8 சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் பந்து வீச்சில் 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இறுதியாக இவர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் விளையாடினார். தனது ஓய்வு குறித்து கூறிய சைட்பொட்டம்:
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடியதை மிகப் பெருமையாக கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற சரியான நேரம் வந்ததால், ஓய்வு பெறுகிறேன்.
நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது ஹாட்ரிக் விக்கெட் பெற்றது மற்றும் மேற்கிந்திய தீவில் நடந்த இருபது20 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் விளையாடியது உள்ளிட்டவை, கிரிக்கெட் அரங்கில் எனது மறக்க முடியாத நினைவுகளாக கருதுகிறேன். எதிர்வரும் 2011இல் நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடரில் விளையாட விருப்பமுள்ளதாக கூறினார்.

No comments:

Post a Comment