Wednesday, September 22, 2010

குண்டு வெடிப்பு சம்பவ எதிரொலி காமன்வெல்த் புறக்கணித்தனர் இங்கிலாந்து வீரர்கள்

லண்டன்,செப்.23
டெல்லி ஜூம்மா மசூதி அருகே நடந்த வெடிகுண்டு விபத்து சம்பவத்தை தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வீரர் வீராங்கனைகள் விலகியுள்ளனர்.
டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் பல நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லி ஜூம்மா மசூதி வெடிகுண்டு விபத்து , போட்டி நடைபெறும் ஜவஹர்லால் விளையாட்டு மைதானத்திற்கு வீரர்கள் செல்ல, மைதானத்தின் தெற்கு வாயிலில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பல வெளிநாட்டு வீரர்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.
இது பற்றி வீரர்கள் கூறியது வருமாறு:
இங்கிலாந்தின் டிரிபிள் ஜம்ப் வீரர் பிலிப்ஸ் :
எனக்கு குடும்பமும் குழந்தைகளும் உள்ளனர். பதக்கங்களைவிட என்னுடைய பாதுகாப்புதான் முக்கியம். அதேபோல் என்னுடை குழந்தைகளுக்கும் நான் முக்கியம்' என்று கூறி காமன்வெல்த் போட்டியினை புறக்கணித்துள்ளார்.
பிரிட்டன் வீராங்கனைகள் கிறிஸ்டைன் ஓகுருகே, டோப்ரிஸ்கி ஆகியோரும் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
ஓகுருகே 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நடப்பு காமன்வெல்த் சாம்பியன் ஆவார்.
லிசா டோப்ரிஸ்கே 1500 மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆவார்.
முன்னதாக, வட்டு எறிதல் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய வீரர் டேனி சாமுல்ஸ் போட்டியில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக அறிவித்துவிட்டார்.

No comments:

Post a Comment