Wednesday, September 22, 2010

கால்பந்து போட்டியில் மீண்டும் கோல்டன் கோல்


புதுடெல்லி, செப்.23
உலக கால்பந்தின் வழக்கமான நடைமுறையில் இருந்த கோல்டன் கோல் எனும் நடைமுறை மீண்டும் அமல்படுத்த சர்வதேச கால்பந்து அமைப்பு திட்டமிட்டு வருகிறது. கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில் எந்த அணி கோல் அடிக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதற்கு கோல் டன் கோல் எனும் பெயரிடப்பட்டது .முதல் நிமிடத்திலேயே ஒரு கோல் போடப்பட்டாலும் ஆட்டம் முடிவடையும். எதிரணிக்கு போராடும் வாய்ப்பு தரப்படமாட்டாது. இந்த விதிமுறைக்கு உலக அணிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் கடந்த 1998 மற்றும் 2002ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் கோல்டன் கோல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.இந்த விதிமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டது இத்தாலி அணி என்று அப்போது கூறப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டில் நடந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்தில், இறுதிவரை இத்தாலியும், பிரான்ஸ்ஸும் வந்தன. இதிலும் கோல்டன் கோல் நடைமுறைப்படுத்தப்பட்டு கடைசியில் பிரான்ஸ் 21 என்ற கோல் கணக்கில் ஐரோப்பிய கால் பந்து கோப்பை கைப்பற்றியது. இறுதி ஆட்டம் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இத்தாலி அணி வீரர்கள் விரக்தி அடைந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த விதிமுறை தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பிபா தலைவர் செப் பிளேட்டர் :
கடந்த 1995 முதல் 2005 வரை நாக் அவுட் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தால் கோல்டன் கோல் எனும் நடைமுறை அமுலில் இருந்தது.
தற்போது, மீண்டும் கோல்டன் கோல் விதிமுறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம்.தற்போதுள்ள கூடுதல் நேரத்தில் பெரும்பாலான அணிகள் தடுப்பாட்டத்தை மட்டும் கடைப்பிடிக்கின்றன. இதனால் கூடுதல் நேர ஆட்டம் போரடித்துப் போகிறது. இதனால் கூடுதல் நேர ஆட்டத்தை கோல்டன் கோல் விதிமுறையுடன் செயல்படுத்த திட்டமிடப்படுகிறது. அப்போது தான் வீரர்கள் தடுப்பாட்டத்தை கைவிட்டு தாக்குதல் ஆட்டத்தில் இறங்குவார்கள் என்று கூறினார்.

No comments:

Post a Comment