Thursday, September 23, 2010

பந்துவீச்சு பயிற்சியில் மாற்றம் தேவை வெங்கடேஷ் பிரசாத்


பெங்களுர்,செப்.24
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு பயிற்சியில் மாற்றம் தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது அவர் கூறியது வருமாறு:
இந்திய பந்து வீச்சாளர்களின் அணுகுமுறையில் பிரச்சனை உள்ளது, அதுதான் இன்றைய பந்து வீச்சு பலவீனங்களுக்குக் காரணம். பந்து வீச்சாளர்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லவேண்டும், வலையில் நீண்ட நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடவேண்டும். வலையில் 20 நிமிடங்களுக்குப் பந்து வீசி விட்டு மேட்சில் வந்து 20 ஓவர்களை வீச முடியாது. வலைப் பயிற்சியில் பந்து வீச்சு பயிற்சியைப் பார்த்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன், இப்போதெல்லாம் நிறைய பயிற்சி அளிக்கப்படுகிறது, இருந்தும் பந்து வீச்சாளரகளிடம் கட்டுப்பாடு இல்லை. வீரர்கள் தங்கள் அணிக்கும், பயிற்சியாளருக்கும் மிக முக்கியமாக தங்களுக்கு தாங்களே நேர்மையாக இருக்க வேண்டும், இல்லையெனில் மாற்றங்களைக் காண முடியாது.இஷாந்த் ஷர்மாவை பயிற்சியில் ஈடுபடுவதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் . தற்போது அவரது பந்து வீச்சில் மணிக்கட்டின் நிலை சரியாக அமையவில்லை. விரல்களும் பந்தின் தையல் மீது சரியாக உட்காரவில்லை.மாறாக மணிக்கட்டை சுழற்றுகிறார்.இதனால்தான் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது .
இதேபோல் பிரவீண் குமாரின் மணிக்கட்டு நிலை சிறப்பாக உள்ளது, அவரை டெஸ்ட் போட்டியில் தேர்வுசெய்வது அவசியம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment