Thursday, September 23, 2010

சாம்பியன் லீக் அரையிறுதியில் இன்று சென்னைபெங்களூர் மோதல்

போர்ட் எலிசபெத், செப். 24
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20/20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றது.
போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வாரியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹஸ்ஸி 50 ரன்களை குவித்தார். கேப்டன் தோனி 31 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் ஆடினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வாரியர்ஸ் அணி வீரர்கள் ஒற்றை ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாரியர்ஸ் அணி இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முரளிதரனின் சிறப்பான பந்துவீச்சால் வாரியர்ஸ் அணியின் அனைத்து விக்கெட்டுகளும் பறிபோனது. இதனையடுத்து பத்து ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஏ'' பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் நீக்கம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
வாரியர்ஸ் (தென்னாப்பிரிக்கா), விக்டோரியா (ஆஸ்திரேலியா) ஆகிய 3 அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நிகர ரன்ரேட் +2.050 ஆகும். வாரியர்ஸ் அணியின் ரன்ரேட் +0.588 ஆகும். விக்டோரியாவின் ரன்ரேட் +0.366.
இந்நிலையில் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும். நாளை நடைபெறும் 2வது அரை யிறுதியில் ""பி'' பிரிவில் முதலிடத்தை பிடித்த சவுத் ஆஸ்திரேலியா அணியும் ""ஏ'' பிரிவில் 2வது இடத்தை பிடித்த வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. அதை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, இரண்டு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றன. ஒரு பிரிவில் இடம் பெற்ற அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி அதன் அடிப்படையில் லீக் போட்டியின் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இரு அணிகளும் சமபலம் கொண்டுள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு பஞ்சமிருக்காது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஒப்பிடும் போது சென்னை சற்று பின்தங்கியுள்ளதாகத் தான் தெரிகிறது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் டிராவிட், கோலி,உத்தப்பா,மனிஸ் பான்டே, ரோஸ் டெய்லர் ,கேமருன் ஓயிட் என படை நீளுகிறது. சென்னை அணியில் ஹசி,விஜய் மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகின்றனர். மற்றவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் சென்னை அணியால் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். இதே போல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பவுலிங் தரவரிசையில் டேல் ஸ்டெயின்,பிரவின் குமார்,வினய் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு பக்க பலமாக அணித் தலைவர் கும்ப்ளேவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். பெங்களூர் அணியைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சில் போலிங்கரை தவிர யாரும் சிறப்பாக பந்து வீச்சில் சரியாக செயல்படவில்லை. பந்துவீச்சு ,பேட்டிங் ஆகிய இரண்டு துறைகளிலும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டால் மட்டும் தான் பெங்களூர் போன்ற சிறந்த அணியை வெல்ல முடியும். இந்நிலையில் சென்னை அணிக்கு சற்று ஆறுதலாக காயம் காரணமாக காலிஸ் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment