சிட்னி,மார்ச் 3.
இந்தியாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல்போட்டியில் பல வெளி நாட்டு வீரர்கள் தங்களின் பாதுகாப்புகளை மேற்கோள் காட்டி போட்டியில் பங்கேற்க தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னால் வீரர் டேமியன் மார்ட்டின் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார்.அவர் செய்தியாள்ர்களிடம் கூறியதாவது .ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை வீரர்களின் முடிவுக்கு விட்டு விடவேண்டும் என்றும் இது குறித்து அந்தந்த நாடுகள் எடுக்கும் முடிவுகளை அந்நாட்டு வீரர்கள் மீது திணிக்கக் கூடாது என்று கூறினார் மார்டின்.மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கிரிக்கெட் அமைப்பான்ஐ.சி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு தற்போது ஐ.பி.எல். அணிக்காக முதன் முதலாக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment