Wednesday, March 3, 2010

பாரத ரத்னா கனவு எனக்கும் உண்டு சச்சின்

மும்பை,மார்ச்3
குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து சச்சின் சாதனை படைத்தார். இதையடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என கபில்தேவ்,கவாஸ்கர்,வடேகர் உள்பட பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் தனக்கும் ஒவ்வொரு இந்தியரைப் போல பாரத ரத்னா விருது பெறும் கனவு உண்டு என்று சச்சின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்த எந்தவொரு குடிமகனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம் பாரத ரத்னா விருதாகும். அதனால் அந்தப் பட்டியலில் தன்னுடைய பெயரும் இருக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது.பாரத ரத்னா விருது எனக்கு கிடைத்தால் அது ஒரு மிகப்பெரிய கௌரவமாகவே கருதுவேன் என்றும் இப்போதைக்கு, அது பற்றி நான் சிந்திக்கவில்லை என்றும் சச்சின் கூறினார்.

No comments:

Post a Comment