பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் வக்கார் யூனிசை 2011 உலக கோப்பை போட்டி வரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.இதற்கான ஒப்பந்தத்தை வக்கார் யூனிஸிற்கு அனுப்பப்பட்டது. வக்கார் தற்போது சிட்னியில் உள்ளதால்அவருடைய பதிலுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது. அவர் இந்த வாய்ப்பை ஏற்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புவதாக செய்தியாளர்களிடம் இஜாஜ் பட் தெரிவித்தார்.இது குற்த்து வாக்கர் கூறும் போது
இது நல்ல முயற்சி என்றும் தேசிய கிரிக்கெட் அணியின் மேம்பாட்டிற்காக செய்யப்படும் எந்த ஒரு முடிவையும் நான் ஆதரிக்கிறேன் என்றும் எனினும் பயிற்சியாளர் ஒப்பந்தத்தில் உள்ள சில விவரங்கள் குறித்து என்க்கு விளக்கம் தேவைப்படுவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் கூடிப் பேசி முடிவு செய்துவிட்டு தன்னுடைய முழுமையான சம்மதத்தை தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்
No comments:
Post a Comment