மும்பை,மார்ச்.11
இந்திய கிரிக்கெட்டின் சமிப கால கணடுபிடிப்பான ஐ.பி.ல்.போட்டி வண்ண வண்ண வானவேடிக்கை, நடனம் ,பாப் இசையுடன் கோலாகலமாக நாளை தொடங்குகிறது.இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஐ.பி.ல். இதுவரை நடந்த இரண்டு ஐ.பி.ல் போட்டியில் முதல் போட்டி இந்தியாவிலும், இரண்டாவது ஐ.பி.ல் போட்டி இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக தென்னாப்பிரிக்காவிலும் நடைப்பெற்றது. பயங்கரவாதிகளின் எச்சரிக்கை காரணமாக முன்றாவது ஐ.பி.ல்.போட்டி நடக்கும் இடத்தையும் மாற்ற வேண்டும் என வெளிநாட்டு வீரர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர் இந்நிலையில் முன்றாவது ஐ.பி.ல்.போட்டி நாளை வண்ணமயமாக தொடங்குகிறது.நாளை தொடங்கும் முன்றாவது ஐ.பி.ல். வரும் ஏப்ரல் 25ந் தேதி வரை நடக்கிறது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் லெவன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ் தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் மும்பை, மொகாலி, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, கட்டாக், நாக்பூர், ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியின் தொடக்க விழா நாளை மாலை 5 மணிக்கு மும்பை மைதானத்தில் நடக்கிறது.தொடக்க விழா முடிந்ததும் ஐ.பி.எல்லின் முதல் போட்டி நடைபெறும். இதில் டெக்கான் சார்ஜர்ஸ் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அன்று ஒரு போட்டி மட்டுமே நடைபெறும். மறுநாளில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 போட்டிகள் நடக்கும்.தொடக்க விழாவில் மும்பை பிரபல சினிமா நட்சத்திரங்கள், பிரபல நபர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். வானவேடிக்கை, வண்ண லேசர் ஒளிக்காட்சி போன் றவைகளுடன் தொடங்கும் இந்த விழாவில்நடிகை தீபிகாபடுகோனேவின் நடனம், லியோனல் ரிக்கி, அப்பா ரெவிவல் யூ.பி.40 இசைக்குழுவின் பாப் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன என்று ஐ.பி.ல் போட்டி சேர்மன் லலித்மோடி கூறினார்.
No comments:
Post a Comment